tamilnadu

உதகை அருகே கார் மோதிய விபத்தில் இருவர் பலி

உதகை, ஆக 2 - உதகை அருகே சாலையோரத்தில் நடந்து சென்ற வர்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள எச்பி எப் பகுதியில் நூர்ஜஹான்(55) மற்றும் அவரது கண வர் அஸ்லாம் ஆகியோர் வசித்து வந்தனர். பக்ரீத் பண்டிகையான சனியன்று அருகில் இருக்கும் உறவி னர்களின் வீடுகளுக்குச் சென்று பக்ரீத் வாழ்த்து கூறு வதற்காக பேரன் ஆசிக்(8) உடன் நூர்ஜஹான் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று நிலைதடுமாறி இவர்கள் மீது மோதியதில் நூர்ஜஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த ஆஷிக் கோவை மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவரும் ஞாயி றன்று உயிரிழந்தார். இந்நிலையில், வாகனத்தை ஓட்டிவந்த மணிகண்டன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்த புதுமந்து காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். பக்ரீத் பண்டி கைக்கு வாழ்த்து கூறச் சென்ற இருவர் பலியான சம்ப வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

;