tamilnadu

img

ஹெலிகாப்டர் விபத்து – கருப்புப்பெட்டியை கண்டெடுத்த தொழில் நுட்பகுழு  

குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில்,  நீலகிரியில் விபத்து நிகழ்ந்த காட்டேரி பகுதியில் இருந்து கருப்புப்பெட்டி உள்ளிட்ட 3 பொருட்களை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர். கண்டெடுக்கப்பட்ட கருப்புப்பெட்டியை டெல்லி அல்லது பெங்களூருக்கு கொண்டு சென்று ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.  விமான கட்டுப்பாட்டு அறையுடன் விமானியின் பேச்சு பதிவு அடங்கிய  கருப்பு பெட்டியை ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.      

டெல்லியில் இருந்து வந்த தொழில் நுட்பகுழு, வெல்லிங்டன் ராணுவ மைய குழு கருப்புப்பெட்டியை கண்டெடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

;