உதகை, மார்ச் 1- உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பெரணி செடிகளை பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர். சுற்றுலா நகரமான உதகைக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தாவ ரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பார்வையி டுவதற்காக பூங்கா முழுவதுதிலும் பல லட் சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள் ளது. அதுமட்டுமின்றி, கண்ணாடி மாளிகை யில் மலர் தொட்டிகள் அலங்கரித்து வைக் கப்பட்டிருக்கும். அதேபோல், கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான பெரணி செடிகளும் வைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின் றனர். மேலும், ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு வைக்கப்பட்டுள்ள பெரணி செடி கள் குறித்த குறிப்புகளை எடுத்துச் செல் கின்றனர். இதனால், எப்போதும் பூங்காவில் உள்ள பெரணி இல்லத்தில் சுற்றுலா பய ணிகள் மட்டுமின்றி ஆராய்ச்சி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை காண முடியும். மாணவர்கள் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளாக இங்குள்ள பெரணி இல்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், கோடைக்காலம் நெருங்கியுள்ளதால், தாவரவியல் பூங்கா பராமரிப்பு பணி தீவி ரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பெரணி இல்லத்தில் உள்ள அனைத்து பெரணி செடிகளும் பசுமையுடன் காட்சி யளிக்க நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சி பரா மரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.