tamilnadu

img

பிரபல தொழிலதிபர் கே.என்.மாதள்ளி மறைவு

உதகை, அக். 24- பிரபல தொழிலதிபர் கே.என்.மாதள்ளி உடல் நலக்குறைவால் வியா ழனன்று காலமானார். நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலு காவிற்கு உட்பட்ட மேல் கோடேரியை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் கே.என்.மாதள்ளி (101).  இவர் நீலகிரி மாவட்டத்தில் துவக்க காலத்தில் தேயிலை தொழிற்சாலையை நிர்மா ணித்தவர்களில் ஒருவராவார். இவர்  நிறுவிய நேஷன் டீ ஃபேக்டரி கோடேரி கிராமத்தில் இயங்கி வரு கிறது. மேலும் கோவை சாந்தி தியேட் டர், கே.என்.எம் மில்ஸ், காட்டேரி டெக்ஸ்டைல்ஸ், சாரதா எலக்ட்ரா னிக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை நிறுவனராவர். கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று  வந்த அவர் வியாழனன்று அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநி லக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.வாசு, ஜெ.ஆல்தொரை, எல்.சங் கரலிங்கம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  வெள் ளியன்று (அக்.25) பிற்பகல் 12 மணி யளவில் கோடேரி கிராமத்தில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.