உதகை, மார்ச் 1- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உதகையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் இஸ்லாமிய சிறு வர்கள் ஆவேச முழக்கங்களை எழுப்பினர். மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடெங்கிலும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசி யல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம், உதகை, பெரிய பள்ளிவாசல் அருகில் கடந்த 4 நாட்களாக இஸ்லா மிய அமைப்பினர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு 10 மணி வரை இந்த தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில், கலந்து கொண்ட சிறுவர்கள் குடி யுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.