உதகை, மார்ச் 8- நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியத்தின் சார்பில் ரூ.4.46 கோடி மதிப்பிலான மானியம் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் மேம்பாட்டிற்கும், தரமான பசுந்தேயிலை உற்பத்தி செய்து தொழிற்சாலைக ளுக்கு விநியோகம் செய்ய வும், ஆர்தோடக்ஸ் ரக தேயிலை தூளை தயார் செய்ய ஊக்கு விக்கவும், தேயிலை தொழிற்சாலை களை மேம்படுத்தவும் தேயிலை வாரியம் சார்பில் பல்வேறு மானியம் வழங்கப்படு கிறது. அதனடிப்படையில், குன்னூரில் உள்ள உபாசி அரங்கில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. இதில் தேயிலை வாரியத் தின் செயல் இயக்குநர் பாலாஜி ஆயிரத்திற் கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.4.46 கோடி மதிப்பிலான மானியங்களை வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் தேயிலை வாரியத் துணை தலைவர் குமரன் மற்றும் தேயிலை வாரியத்தின் உறுப்பினர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.