நீலகிரி, பிப். 18- காந்தல் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தை பராமரித்து கூடுதல் மருத்துவர்களை நியமிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, உதகை காந்தல் பகு தியில் உள்ள பேபிஹால் அரசு சுகாதார நிலை யம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகி றது. இந்த சுகாதார நிலையத்தில் பிங்கர்போஸ்ட், பட்பயர், குளிச்சோலை, கஸ்தூரிபாய் காலனி, தீட் டுக்கல், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிகிச்சைக் காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் சமீபகால மாக சுகாதார நிலையத்தை முறையாக பராமரிக்காத நிலையில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணிக்கு வருவதில்லை. இதனால், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மருத்துவ வசதி யின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களில் சிகிச்சைக்காக உதகை அரசு தலைமை மருத்துவ மனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, காந்தல் சுற்றுவட்டார பகுதி மக்களின் நலன் கருதி காந்தல் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தை முறையாக பாராமரித்து, மருத்துவர்கள், செவிலியர்களை நிய மிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.