tamilnadu

img

சாலை வசதிகோரி பொதுமக்கள் மனு

உதகை,ஜன.20- மக்கள் குறைதீர் கூட்டத்தில் சாலை வசதி கோரி நஞ்ச நாடு பகுதி மக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட முத்தோரை தோடர் காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி யில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ங்கள் சென்றுவரவும், குழந்தைகள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்லவும் முடிவதில்லை. மேலும் அவசர காலங்க ளில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சும் வர முடிவதில்லை. தற்போது கான்கிரீட் சாலை ஒன்று போடப்பட்டு வருகிறது. அதனை இன்னும் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு நீட்டிக்க வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  நஞ்சநாடு பகுதி மக்கள் மனுவில் கோரியிருந்ததாகத் தெரிவித்தனர்.

;