tamilnadu

img

காலமானார்

உதகை அக்.24-  நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகாவிற்கு உட் பட்ட கொளப்பள்ளி வள்ளிகாட்டைச் சேர்ந்த மார்க் சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஜோசப் (67) உடல்நலக் குறைவால் காலமானார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1982 ஆம் ஆண்டில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியை கட்டுவதிலும்,  விவ சாய சங்கத்தை உருவாக்குவதிலும் முன்நின்று செய லாற்றியவர் தோழர் ஜோசப். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருதய கோளாறால் பாதிக்கப்பட்டு வந்த இவர் சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் அனு மதிக்கப்பட்டார். இந்நிலையில் செவ்வாயன்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவருக்கு மரியம்மாள் என்ற மனைவியும், பிஜு, பிஜே ஆகிய 2 மகன்களும், ஜூபி என்ற மகளும் உள்ளனர்.  இவரது மறைவை அறிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் வி.எ.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.வாசு, எ.யோ கண்ணன், எருமாடு இடைக் கமிட்டி செயலாளர் கே.ராஜன், டி.சுதர்சன், விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் பி. தமிழ்மணி, வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து புதனன்று மதியம் கொளப்பள்ளியில் உள்ள செயின்ட் மேரிஸ் தேவாலய வளாகத்தில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.