துணை செவிலியர் பணியிடத்துக்கு ஆக.26ல் நேர்காணல்
உதகை, ஆக.24- நீலகிரி மாவட்டத்தில் துணை செவிலியர் பணி யிடங்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரி பார்ப்புப் பணி வரும் திங்களன்று (ஆக.26) நடை பெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது, தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் சார்பில் துணை சுகாதார செவிலியர் பணியி டங்களுக்கான நேர்காணல் கடந்த 9 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. ஆனால், அப்போது பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பில் சிலரால் கலந்து கொள்ளமுடியவில்லை. அவர் களுக்காக வரும் திங்களன்று (ஆக.26) உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேர் காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும். இதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் அறிவிக் கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பெருமாநல்லூர் அருகே கழிவுகளை கொட்டிய லாரி சிறைப்பிடிப்பு
அவிநாசி, ஆக. 24- பெருமாநல்லூர் அருகே கழிவுகளை கொட்ட முயன்ற லாரி வியாழனன்று இரவு சிறை பிடிக்கப்பட்டது. திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பெருமாநல்லூர், ஈட்டிவீராம் பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு உள் பட்ட பகுதிகளில் கருக்கன்காட்டுப்புதூர், மொய்யாண்டம்பாளையம், மூட்டியங் கிணறு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங் களில் லாரிகளில் மனிதக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டி வந்தனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதாரக் கேடு ஏற்பட்டு வந்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தினரிடம் அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்துவந்தனர். இந்நிலையில் மொய்யாண்டம் பாளையம் அருகே பவர்ஹவுஸ் பகுதியில் மனிதக் கழிவுகளை கொட்டிச் சென்ற லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து சிறை பிடிக்கப்பட்ட லாரியை வெள்ளியன்று காலை சுகாதாரத்துறை யினர் ஆய்வு செய்து ரூ.ஆயிரம் அபாராதம் விதித்தனர்.