உதகை, நவ.18 - அஞ்சல்துறையின் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அரசானை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணை எண் ஜிஎஸ்ஆர் 921 (இ)ன் படி, அஞ்சல்துறையின் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ.50 ல் இருந்து ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, அஞ்சலகங்களில் உள்ள சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.500 என்ற அளவில் பராமரிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறை வருகிற டிச.12 ஆம் தேதி முதல் மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. எனவே, சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூ.500 ஆக உயர்த்திக் கொள்ள வருகிற டிச.11 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக் கப்பட்டுள்ளது. அவ்வாறு, குறைந்தபட்ச இருப்புத் தொகையினை உயர்த்தாத பட்சத்தில் இந்த புதிய விதிமுறைகளின்படி மார்ச்.31, 2021 முதல் அபராத கட்டணமாக தங்களது கணக்கில் இருந்து ரூ.100 ஒவ்வொரு வருடமும் கழிக்கப்பட்டு இருப்புத் தொகை குறைக்கப்பட்டு கணக்கு காலாவதியாகிவிடும். எனவே, இதனை தவிர்க்க மேற்குறிப் பிட்டுள்ள கால அவகாசத்திற்குள் தங்களது அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்தி கொள்ள வேண்டும் என நீலகிரி கோட்டம் அஞ்சல் கண்காணிப்பாளர் வி.குணசீலன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.