உதகை, டிச. 9- அய்யங்கொல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பகுதிக்குழு அலுவலகத் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், எருமாடு இடைக் க மிட்டிக்கு உட்பட்ட அய்யங்கொல்லியில் நடைப்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் பகுதி குழு அலுவலக திறப்பு விழா விற்கு கட்சியின் இடைக் கமிட்டி செயலா ளர் கே.ராஜன் தலைமை வகித்தார். மாவட் டக்குழு உறுப்பினர் டி.சுதர்சன் வரவேற் றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு கட்சி கொடியினை ஏற்றிவைத்தார். மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் கட்சி அலுவலகத்தையும், மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.பத்ரி கூட்ட அரங்கைத்தையும் திறந்து வைத்தனர். இந்நிகழ்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.யோகண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.ஜே.வர்க் கிஸ், எம்.ஏ.சௌகத், சாந்தா, இடைக்குழு உறுப்பினர்கள் டி.கே.பிலிப், முகுந்தன், அனிபா மாஸ்டர், ஜெயமோள், திலிப், பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அச்சுதன் மாஸ்டர் நன்றி கூறினார்.