tamilnadu

img

ஆசிரியர் பணி நியமன வயது வரம்பைக் குறைப்பதா? ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

உதகை,அக். 29 - ஆசிரியர் பணி நியமன வயதை 40 ஆக குறைத்த அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊக்க ஊதிய உயர்வு ரத்து அரசு ஆணையை திரும்பப்பெற வேண் டும். ஜாக்டோ - ஜியோ போராட் டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட் டங்களில் ஈடுபட்டனர். உதகையிலுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவல கம் முன்பு வியாழனன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டத் தலைவர் பி.தினகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.சுனில்குமார், பொருளாளர் ஜெயசீலன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் எஸ்.சர வணகுமார்,  தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கி.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புத னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், கூட்டணியின் மாவட் டச் செயலாளர் கனகராஜா உள்பட நிர்வாகிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலா ளர் தங்கபாசு, பொருளாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.