உதகை, நவ. 5- நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று நீலகிரி வருகை தரவுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது, நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தமிழக அரசி னர் விருந்தினர் மாளிகையில் வெள்ளியன்று மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆய்வு நடத்த உள்ளார். இதனைத்தொ டர்ந்து முன்னாள் படைவீரர் நல துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, கூட்டுறவுத் துறை, நகராட்சிகள், வனத்துறை ,தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள், தாட்கோ, இன்கோ சர்வ்,தோட்டக்கலை துறை, கதர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தொழில்நுட்ப கல்வி துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணி களை பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, பயனாளிகளுக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெருங்கடன், இயற்கை வேளாண்மை செய்ய ஊக்கத்தொகை வழங்கு தல், முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் பயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.