உதகை, பிப். 3- நீலகிரி மாவட்டம், அம்பலமூலா தேனம் பாடி பழங்குடியினர் கிராமத்தில் செறிவூட்ட பட்ட உணவுகள் குறித்த ஊட்டச்சத்து விழிப் புணர்வு நிகழ்ச்சி ஞாயிறன்று நடை பெற்றது. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், நீல கிரி வயநாடு ஆதிவாசிகள் நல சங்கம், கூட லூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து அம்பலமூலா, தேனம்பாடி ஆதிவாசிகள் கிராமத்தில் செறி வூட்டல் உணவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி- வயநாடு ஆதிவாசிகள் சங்க திட்ட மேலாளர் ரொனால்ட் தலைமை தாங்கி னார். சமூக பணியியல் துறை மாணவி விஜயாம்பிகை வரவேற்றார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளி முத்து, பந்தலூர் கால்நடை மருத்துவர் பாலாஜி, ஆதிவாசிகள் நல சங்க நிர்வாகி நோவன்லூதர்கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்க ரசு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்புமைய செயலாளர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர். இந்நிகழ்ச்சி யின் இறுதியில் பழங்குடியின மக்களுக்கு அயோடின், இரும்பு சத்து கலந்த அரசு உப்பு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பழங்குடியினர் கலந்து கொண்டனர்.