tamilnadu

img

உடைந்து நொறுங்கும் டிரம்ப் குற்றச்சாட்டு

“கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றியதே!” 

வாஷிங்டன், மே 6- கொரோனா வைரஸ் “இயற்கையில் உருவானது” என்று அமெரிக்க சுகாதாரம் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர் அந்தோனியோ பவுசி கூறியுள்ளார். அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பல்வேறு கருத்துக்களை நிராகரித்துள்ளார். இந்தக் கருத்தை அவர் நேஷனல் ஜியோகிராஃபிக் ஊடகத்திடம் கூறியுள்ளார். சீனாவின் வுகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, வுகா னில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் உருவானது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன என்றும் கூறியிருந்தார். கொரோனா விவகாரத்தில் சீனாவின் வுகான் நகர ஆய்வகத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் தெளிவான அறிக்கையை வெளியிடுவோம். அதுதான் முடிவானதாக இருக்கும் என்று டொனால்டு டிரம்ப்பும் கூறியிருந்தார். 

இந்த நிலையில் அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் அந்தோனி யோ பவுசி கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகத்தில் தோன்றியதாக நம்பவில்லை. வௌவ்வால் களது வைரஸின் பரிணாம வளர்ச்சியையும் இப்போது உள்ள வைரசையும் பார்த்தால், கொரோனா வைரஸ் செயற்கையாகவோ அல்லது வேண்டுமென்றே பரப்பப்பட்டிருக்க முடியாது.

கடந்த வாரம் அமெரிக்க உளவுத்துறை, கொரோனா பரவல் விலங்கு களின் தொடர்பின் மூலம் ஏற்பட்டதா அல்லது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா என்பதைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்வதாக கூறி யிருந்தது. ஆனால், சீன ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரப்பப்பட வில்லை என்பதை முற்றாக நிராகரித்தது. இவ்வாறு அவர் கூறினார். உலக சுகாதார நிறுவன தலைவர் மரியா வான் கெர்கோவ் திங்க ளன்று நடந்த மாநாட்டில், “கொரோனா வைரசில் 15,000 முழு மரபணு வரிசை முறைகள் கிடைத்துள்ளது, நாங்கள் பார்த்த எல்லா ஆதாரங்களிலி ருந்தும் இந்த வைரஸ் இயற்கையான தோற்றம் கொண்டது” என்று உறுதியாகக் கூறினார். கொரோனா வைரஸ்கள் பொதுவாக வெளவால்களில் தோன்றினா லும், வான் கெர்கோவ், ரியான் இருவரும் கொரோனாவை பரப்பும் வைரஸ் எவ்வாறு மனிதர்களைக் கடந்து சென்றது என்பதைக் கண்டுபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

 

பேரிடர் மீட்புக்குழுவை கலைக்கிறார் டிரம்ப்?

கொரோனா பற்றிய பேச்சு இனி கிடையாது 

வாஷிங்டன், மே 6- கொரோனா வைரசுக்கு இனி தினசரி முக்கியத்துவம் அளிக் கப்போவதில்லை என்றும் அதற்  காக அமெரிக்க துணை ஜனாதி பதி மைக் பென்ஸ் தலைமையில் அமைக்கப் பட்ட பேரிடர் மீட்புக்குழுவில் உள்ளவர்களின் எண்ணிக்கை யை குறைத்துவிடலாம் அல்லது மூடிவிடலாம் என வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் இறப்பவர் எண்ணிக்கை 65,000 ஐத் தாண்டியுள்ளது. செவ்வாயன்று 2,527 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 230 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்காவில் கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க்கைத் தொடர்ந்து இரண்டாவது மிகக் கடுமையான பாதிப்புக் குள்ளான மாநிலமாக நியூ ஜெர்சி உள்ளது. அதற்கடுத்த இடத்தில் பென்சில்வேனியா உள்ளது. இங்கு சுமார் 850 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா பர வலைத் தடுக்கவே மைக் பென்ஸ் தலைமையில் ஒரு பேரிடர் மீட்புக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழு ஜனாதிபதி டிரம்புக்கு அறிக்கை அளிப்பது, மருத்துவ நிறுவனங்கள், மாநில கவர்னர்கள் ஆகி யோரை ஒருங்கிணைப்பது, மருத்துவமனைகளுக்கு உதவு வது போன்ற பணிகளை செய்து வருகிறது. சமூக வில கலுக்கான தேசிய பரிந்துரைகளை அளித்துவந்தது. பேரிடர் மீட்புக்குழு மூடப்பட்டால் டாக்டர் பிர்க்ஸ், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் அந்தோனியோ பவுசி ஆகியோரிடமிருந்து டிரம்ப் தொடர்ந்து ஆலோசனை பெறுவார். 

டிரம்ப் இனி மருத்துவ நிபுணர்களை அணுக மாட்டார் என்று கூறுவது “முற்றிலும் தவறானது” என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டரான பாப் கேசி கூறுகையில், பணிக்குழுவைக் கலைப்பது தவறான அணுகுமுறை; டிரம்ப் நிர்வாகம் கண் களை மூடிக்கொண்டு இந்த தொற்றுநோய் பரவாது என்று நடிக்கலாம் என நினைக்கிறார்கள்; அது அவர்களால் முடி யாது, கொரோனா தொடர்ச்சியான நெருக்கடியைத் தரும். அனைவருக்கும் கைகோர்த்துதான் பிரச்சனையை அணுக வேண்டும் என்றார்.