வாடிகன் சிட்டி,மே 11- உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்கள் ஒவ்வொன்றிலும், பாதிரியார் களின் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் வழிமுறை ஒன்றை அடுத்தஆண்டு (2020) ஜூன் மாதத்துக்குள்உருவாக்க வேண்டும்.மேலும் பாதிரியார்களின் பாலியல் சுரண்டல் குறித்து யாரும் அறிந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அவருக்குஉயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களிடம் புகார் செய்ய வேண்டும்என்றும் போப் பிரான்சிஸ் தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.