tamilnadu

img

கொரோனா இல்லாத நாடாக மாறியது நியூஸிலாந்து

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் குணமாகி வீடு திரும்பியதாக நியூஸிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
தெற்கு பசிபிக் நாடான நியூஸிலாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி .28ம் தேதி முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  இதையடுத்து 1500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி  22 பேர் உயிரிழந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை காட்டிலும், நோய் பாதிப்பை முற்றிலும் ஒழிப்பதை நோக்கமாக கொண்டு அந்நாட்டில் 7 வார காலம் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 
இதனால் கடந்த 17 நாட்களாக யாரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதனால் தற்போது கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் அறிவித்துள்ளார். 
இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஊடகங்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது “நியூஸிலாந்தில் கடந்த 17 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த கடைசி கொரோனா நோயாளி குணமடைந்துவிட்டார். கடந்த 17 நாட்களாக 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.
ஆதலால் நாட்டின் பொருளாதார நடவடிக்கைக்காக அடுத்தகட்ட தளர்வுகளை இன்று அமைச்சரவை கூடி ஆலோசித்து அறிவிக்கும். நியூஸிலாந்திலிருந்து கொரோனா வைரஸை ஒழித்து விட்டோம் என நம்புகிறோம். மீண்டும் வைரஸ் இங்கு வந்தால் நாம் தோற்றுவிட்டோம் என்று அர்த்தம் அல்ல, வைரஸ் பாதிப்பு என்றால் மீண்டும் வரத்தான் செய்யும். ஆதலால் தொடர்ந்து கொரோனா வரவிடால் தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
நாட்டிலிருந்து கொரோனா வைரஸை ஒழிக்க பல காரணிகள் துணைபுரிந்துள்ளன என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பொருளாதார நடவடிக்கையை வேகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும், நாட்டுக்குள் வரும் வெளிநாட்டினர் அனைவரும் தனிமைப்படுத்தும் பணி தொடரும் என்பதில் மாற்றமில்லை” எனத் தெரிவித்தார்