ஒருங்கிணைந்த சாலை உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக 5300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி நடப்பாண்டில் 6,584 சாலைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி பிரதேசத்தில் இ- பாஸ் நடைமுறை ரத்து செய்யப் பட்டுள்ள நிலையில், வெளிமாநிலத்த வர் வர தடையில்லை என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் டிக்-டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 3 வேளாண் உதவி இயக்குநர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி களில் 1 முதல் பிளஸ்-1 வகுப்பு வரை 5.5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்திருப்பதாகவும், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இருந்து பலர் சேர்ந்து இருப்பதாகவும் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் புதனன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு ஆனது.
காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம் பவத்தில் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,957 கனஅடி யில் இருந்து 6,204 கனஅடியாக குறைந்துள்ளது.