tamilnadu

img

காபி சிந்தியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

காபி சிந்தியதால் 326 பேர் பயணித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவத்தில் ஜெர்மனியில் நடந்துள்ளது.

ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் இருந்து மெக்சிகோவின் கேன்கன் நகருக்கு ஏர்பஸ் ஏ330 ரக விமானம் புறப்பட்டது அட்லான்டிக் கடலின் மேற்பரப்பில் பறந்துகொண்டிருந்த போது, விமானி அறையில் டிரேயில் வைக்கப்பட்ட காபி சிந்தியது. காபி விமானத்தைக் கட்டுப்படுத்தும் பேனல் பகுதியில் சிந்தியதால், ஆடியோ செயலிழந்தது. அத்துடன், மின்சாதனப் சாதனங்களில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை அயர்லாந்துக்குத் திருப்பி தரையிறக்கினார். 

கடந்த பிப்ரவரியில் நடந்த இச்சம்பவம் குறித்து விமான விபத்துப் புலனாய்வு பிரிவு விசாரணையை நடத்தி வரும் நிலையில், உள்நாட்டு வான்போக்குவரத்து சட்டப்படி 10 ஆயிரம் முதல் 80 ஆயிரம் யூரோக்கள் அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.