tamilnadu

img

நியூயார்க், லண்டனில் 3 மலையாளிகள் கொரோனாவுக்கு  பலி

நியூயார்க்
கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் கரிக்கும் பகுதியைச் சேர்ந்த உம்மன் குரியன். இவர் அமெரிக்காவின் நியூயார்க் பகுதி மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். குடும்பத்துடன் 17 நியூயார்க்கில் தங்கி இருக்கும் இவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மனைவி, மகன், மகள் தற்போது வீட்டில் கண்காணிப்பில் உள்ளனர். செவ்வாயன்று இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதே போல திருவல்லா செங்கூரைச் சேர்ந்த எலியாம்மயும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி நியூயார்க்கில் இறந்துள்ளார். ஏற்கனவே, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அமெரிக்காவில் உயிரிழந்தனர்.

கொல்லம் ஓடனாவட்டம் செல்லப்பன் மனைவி இந்திரா (72) லண்டனில் கொரோனா  பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்தார். முட்டற அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் செவிலியராக லண்டனில் வேலை பார்க்கும் மூத்த மகளுடன் வசித்து வந்தார். பக்கவாதத்துக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தார். ஆனால் இவருக்கு மருத்துவமனையில் கொரோனா  தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில்  ஞாயிறன்று இந்திய நேரப்படி இரவு 7.15க்கு மரணமடைந்தார்.