tamilnadu

img

ஈரானை மிரட்டும் கொரோனா...  ஒரே நாளில் 129 பேர் பலி 

டெஹ்ரான்
மத்திய கிழக்கு நாடான ஈரானில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஈரான் மக்களை வீட்டை வீட்டு வெளியே வரவிடாமல் பாதுகாத்தாலும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பாடில்லை.

கடந்த 24 மணிநேரத்தில் ஈரானில் கொரோனா வைரஸால் 129 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 1000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி ஈரானில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 852-ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 14,000-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

;