வாஷிங்டன்,அக்.25- அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் பிரபல நாளிதழ்களை தவிர்க்குமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கை முடிவுகளை விமர்சனம் செய்யும் நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் மீது டொனால்ட் டிரம்ப் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்நிலையில், அந்நாட்டின் பிரபல நாளிதழ்களான வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கான சந்தா தொகையை நிறுத்துமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.வெள்ளை மாளிகையில் மேற்கண்ட நாளிதழ்தகளை இனி அனுமதிக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அரசின் இதர துறைகளும் இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், இந்த இரு நாளிதழ்களும் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டி வந்தார். செய்தி மக்களை சென்றடையாமல் இருக்காது. டிரம்ப்பின் நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் தலைவர் ஜொனாத்தன் கார்ல் கூறுகையில், ஜனாதிபதி படிக்காமல் போனாலும் அங்கீகாரம் செய்யா விட்டாலும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் நிருபர்கள் வழக்கம்போல் தரமான முறையில் தொடர்ந்து கடமையாற்றுவார்கள் என நம்புகிறேன். பத்திரிகையாளர்களின் சுதந்திர மான பணியை புறக்கணிப்பதுபோல் பாவனை செய்வதால் அந்த செய்தி மக்களை சென்றடை யாமல் இருக்காது என்று தெரிவித்தார்.