tamilnadu

img

நடுவானில் பிறந்த குழந்தை 

தாய்லாந்து பெண்ணிற்கு நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது குழந்தை பிறந்த சம்பவம் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
தாய்லாந்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் தேஹாவில் இருந்து பாங்காக் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த  விமானப் பணிப் பெண்கள் உதவியுடன் அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.
இதையடுத்து  அதிகாலை 03:09 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தில் அந்த விமானம் அனுமதிப் பெற்று அவசரமாகத் தரையிறங்கியது. பின்னர் விமானநிலையத்தில் இருந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கு பரிசோதனை நடத்தினர்.