tamilnadu

img

நுண் நிதி நிறுவனங்களின் கோரப் பிடியில் தமிழகப் பெண்கள்

தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு மாதர் சங்க மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டை, செப்.14- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் மாநில சிறப்பு மாநாடு புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. 600-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட் டிற்கு மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, உஷாபாசி, பி.சுசீலா ஆகியோர் தலைமை வகித்தனர். வரவேற்புக்குழுத் தலைவர் என்.கண்ணம்மாள் வரவேற்புரையாற்றினார். மாநி லத் துணைத் தலைவர் என்.அமிர்தம் கொடி யேற்றினார். மாநாட்டை தொடங்கி வைத்து ஆவ ணப்பட இயக்குநர் வைஷ்ணவி சுந்தர் உரை யாற்றினார்.  ‘பணியிடங்களில் பாதுகாப்பு’ என்ற தலைப் பில் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, ‘நுண் நிதி நிறுவனங்கள்’ என்ற தலைப்பில் எஸ்.தமிழ்ச்செல்வி ஆகியோர் ஆய்வறிக்கைகளை முன் வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், பொருளாதார நிபுணர் தாமஸ் பிராங்கோ, ஜீவிகா அமைப்பின் கன்வீனர் ஜி.அருணா ஆகி யோர் உரையாற்றினர். தீர்மானங்களை மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் முன் மொழிந்தார்.

போராளிகள் கவுரவிப்பு

மாநாட்டில் பல்வேறு துறைகளில் போராடி சாதனை படைத்துள்ள பெண்கள் கவுரவிக்கப் பட்டனர். ஆராய்ச்சி மாணவி முத்து, ஆவணப் பட இயக்குனர் வைஷ்ணவி சுந்தர், வழக்கறிஞர் உ.நிர்மலாராணி, பாலியல் துன்புறுத்தலை எதிர்த்துப் போராடிய செல்வி, நுண் நிதி நிறு வனங்களின் கொடுமையை எதிர்த்துப் போரா டிய புதுக்கோட்டை கலா, தஞ்சாவூர் செல்வமணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

பிரசுரங்கள் வெளியீடு

மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி எழுதிய ‘தீர்ப்புகளைப் புரிந்து கொள்வோம்’ என்ற பிரசுரத்தை மாநில செயலாளர் ஆர்.சசிகலா வெளியிட, மாநி லக்குழு உறுப்பினர் ஏ.ஷகிலா பெற்றுக் கொண்டார். பி.சுகந்தி எழுதிய ‘பாதுகாப்பான பணியிடங்கள் அரசின் கடமை’ என்ற பிரசுரத்தை மாநில துணைத் தலைவர் ஜி.கலைச்செல்வி வெளியிட, மாநி லக்குழு உறுப்பினர் இ.சத்யா பெற்றுக் கொண்டார். நிகழ்வுகளை மாநில நிர்வாகிகள் வி.பிரமிளா, ஏ.ராதிகா, எஸ்.லெட்சுமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் டி.சலோமி நன்றி கூறினார்.

பேரணி- பொதுக்கூட்டம்

மாலையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து போராட்ட வீராங்கனை களின் வெண் கொடியேந்தி, பெண்களின் உரி மைகளுக்கான முழக்கங்களுடன் பேரணியும், புதுக்கோட்டை சாந்தநாரபுரத்தில் பொதுக்கூட்ட மும் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் அகில இந்திய, மாநில, மாவட்டத் தலைவர்கள் உரை யாற்றினர்.

தீர்மானங்கள்

தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியில் படிக்கும் 4 இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஐசிசி விசாரித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டு இச்செயலில் ஈடுபட்ட மாணவர் 4 மாதம் சமூக சேவை செய்ய வேண்டும் என்று ‘தண்டனை’யை பரிந்துரைத்துள்ளது.  குற்றம் சாட்டப்பட்ட மாணவன் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனா லும் அந்த மாணவனை காப்பாற்ற கல்லூரி நிர்வா கம் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. பாலியல் துன்புறுத்தல் செய்த மாணவனுக்கு தண்டனை, அவர் சமூகச் சேவை என்பது(அதுவும் தேசிய சட்டப் பள்ளியில்) கண்டனத்துக்குரியது.  பாதிக்கப்பட்ட மாணவிகள் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு பல தயக் கங்கள் இருக்கும் நிலையில், ஐசிசியின் சமூக சேவை என்ற பரிந்துரையை ஏற்காமல் நியாய மான தண்டனையை வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தினை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது.

நுண் நிதி நிறுவனங்களில் கொடுமை

சமீப காலமாக அரசு வங்கிகளில் இணைந்து செயல்படும் சுயஉதவிக் குழுக்களை விட தனி யார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் குழுக்கள் அதிகரித்துள்ளன. ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுண் நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. சுமார் 10 கோடி இந்தியக் குடும்பங்கள் ரூபாய் ஒரு லட்சம் கோடி கடன் கொடுத்து மக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கடனை உடன் கட்ட வில்லை என்றால் மிக இழிவாகப் பேசி அவமா னப்படுத்துகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நேரத்தில் கூட கடனைக் கட்ட வேண்டும் என நிர்ப்பந்தம் கொடுக்கும் பட்சத்தில் வேலூர், திருவாரூர், நெல்லை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. 14 சதம் முதல் 36 சதவிகிதம் வரை வட்டி வசூல் செய்யும் நிலை தொடர் கதையாகி றது. இதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்துவதற்கும், கட்டுப்படுத்து வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மத்திய, மாநில அரசுகள் குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன்களை கூடுதலாக அரசு சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கி தொழில் பயிற்சி யும் கொடுக்க வேண்டும். பயிற்சியின் மூலம் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களை, அரசே வாங்கி விற்பதற்கான சந்தை ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அப்பொழுது தான் ஏழை, எளிய பெண்களின் மீது நடத்தப்படும் இத்தகைய கொடுமையைத் தடுத்து நிறுத்த முடியும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.