பெரம்பலூர், ஜூலை 7- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பெரம்பலூர் ஒன்றிய 8-ஆவது மாநாடு பெரம்பலூர் துறைமங்கலத்தி லுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழனன்று நடை பெற்றது. மாதர் சங்க நிர்வாகி கே.ராணி தலைமை வகித்தார். ஷர்மிளாபேகம் வரவேற்றார். மாவட்ட துணைத்தலை வர் அ.கலையரசி விளக்கிப் பேசினார். நிர்வாகி ஜெயலட்சுமி நன்றி கூறினார். மாநாட்டில், தலைவராக ஷர்மிளா பேகம், செயலாளராக வி.கோவிந் தம்மாள், பொருளாளராக எம்.புவ னேஸ்வரி, துணைத்தலைவராக கே. ராணி, துணைச் செயலாளராக எம். பூங்கொடி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாநாட்டில், தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் நகர்ப்புற மக்களுக்கும் வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பெரம் பலூர் மாவட்டத்தில் தினந்தோறும் பெருகிவரும் திருட்டு சம்பவங்கள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மாவட்ட நிர்வா கம் தடுத்து நிறுத்த வேண்டும், பெரம்ப லூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஏழை, எளிய வீடு இல்லாத மக்களுக்கு இல வச வீட்டு மனை வழங்க மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.