tamilnadu

img

ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு

தமிழகத்தை உலுக்கிய ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் அமுதா, குழந்தைகளை விற்பனை செய்து வருவது தொடர்பான ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் பேசிய அமுதா, குழந்தைகளின் அழகு, கலருக்கு ஏற்பவும் பெண்குழந்தை என்றால் சுமார் 3லட்சமும் ஆண் குழந்தையென்றால் சுமார் 4 லட்சம் வரையும் விலை பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன்,  70 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற்றுத் தரப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தை விற்பனை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 


;