tamilnadu

img

பாஜக- அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறைகூவல்

நாமக்கல், ஏப்.10-பாஜக- அதிமுக கூட்டணியை 40 தொகுதியிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறைகூவல் விடுத்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்னராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில் புதனன்று தேர்தல் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசுகையில், பாஜக- அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, வியாபார கூட்டணி, மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் கூட்டணி இவர்களை 40 நாடாளுமன்ற தொகுதியிலும் தோற்கடிக்கப்பட வேண்டும். ஏப்.12 ஆம்தேதி சேலம் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். மேலும் ஏப்.13 ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.இதில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் செ.காந்திசெல்வன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஷேக் நவீத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் குழந்தான், மதிமுக வழக்கறிஞர் பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளர் மும்பை அர்ஜுனன், முஸ்லிம் லீக் தலைவர் நஜீம், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் மணிமாறன், தேவேந்திர குல வேளாளர் தலைவர் கிருஷ்ணாஜி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;