tamilnadu

img

ராசிபுரத்தில் மாணவர் சங்கத் தலைவர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் கல்லூரியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியரை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்த்துறைக்கு நாமக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம்.


நாமக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு செயலாளர் எஸ் கந்தசாமி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ஆண்டலூர் கேட்  பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் 3500 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வரும் சுந்தரமூர்த்தி கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததின் பேரில், காவல்துறையினர் அவர் மீது போஸ்கோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.... தற்போது தலைமுறைவாக உள்ள பேராசிரியர் சுந்தரமூர்த்தியை  கைது செய்ய வலியுறுத்தி கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் போராட்டம் நடத்தி கொண்டிருந்தபோது கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த  காவல்துறையினர் அராஜகமான முறையில் அக்கல்லூரி மாணவரும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவருமான மு.தங்கராஜ் அவர்களைக் குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி உள்ளனர்.... அப்போது போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் நடராஜ் மற்றும் இரண்டாம் நிலை காவலர் பாபு ஆகியோர்  தகாத வார்த்தைகளில் திட்டி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.... தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சங்கத் தலைவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்...
 பேராசிரியர் சுந்தரமூர்த்தியை கைது செய்யாமல், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான  மாணவிகளுக்கு நியாயமும் நீதியும் கேட்ட ,,மாணவர் சங்கத் தலைவர் மீது காவல்துறையினர் கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது..... மனித உரிமை மீறலாகும்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுவின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. 
இத்தகைய கொடூர தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க கேட்டுக்கொள்வதோடு புகார் அளித்துள்ள மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும் தலைமறைவாக உள்ள காமக்கொடூரன் பேராசிரியர் சுந்தர மூர்த்தியை கைது செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சங்க மாவட்ட தலைவர் மு.தங்கராஜ் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி ராசிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோ. செல்வராசு ராசிபுரம் நகரக் கிளை செயலாளர் சி. சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர் உடன் மாணவர் சங்க மாவட்ட  சரவணன் நிசார் அஹமது உடன் இருந்தனர்.