tamilnadu

வியாபாரி வீட்டில் கொள்ளை

திருச்செங்கோடு, ஜன. 20- திருச்செங்கோடு அருகே வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை போன தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள அம்மையப்பா நகரைச் சேர்ந்த வர் ஜெகதீஸ் (45). இவர் பர்னிச்சர் கடை  வைத்துள்ளார். இவர் தனது மனைவியு டன் துக்க காரியத்திற்காக வெளியே சென் றுள்ளனர். பின்னர், ஞாயிறன்று இரவு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக் கப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சிய டைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு துணிகள் கலைந்து கிடந்துள்ளது. இதுகுறித்து, திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நடத்திய விசாரனை யில் 14 பவுன் தங்க நகைகளும், 5 ஆயிரம் பணமும் கொள்ளை போனது தெரியவந் தது. இதுகுறித்து திருச்செங்கோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரனை நடத்தி வருகின்றனர்.

;