நாமக்கல்லில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்லில் மாவட்டம் என்.புதுப்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் கொத்தடிமைகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பணியாற்றி வந்தனர். தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் 9 பேரையும் மீட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.