tamilnadu

img

தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக செயல்படும் மோலாளர் போக்குவரத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல், நவ.16- தனியார் பேருந்துகளுக்கு ஆத ரவாக செயல்படும் அரசு போக்கு வரத்து கழக மேலாளரைக் கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து  ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில்  திருச்செங்கோடு அரசு போக்கு வரத்து பணிமனை முன்பு சனியன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  போக்குவரத்து தொழிலாளர் களுக்கு விடுப்பு வழங்காத நிலையில், ஆப்சென்ட் போட்டு பலி வாங்குவ தைக் கைவிட வேண்டும். பணிமனை களில் உள்ள சுகாதாரச் சீர்கேடுகளை சரி செய்யவேண்டும். தொடர்ந்து இரண்டு, மூன்று சிப்ட்டுகள் பணி யாற்ற நிர்ப்பந்திப்பதை கைவிட வேண்டும். ஆர்சி, ஆர்டி தொழிலா ளர்களுக்கு பணி எண் வழங்க வேண் டும் என வலியுறுத்தியும், தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாகச் செயல்ப டும் மேலாளரைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடி யுவின் தமிழ் மாநிலத் தலைவ ரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான ஏ.சவுந்தரராஜன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்திற்குப் பின்  செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது,  போக்குவரத்து தொழிலாளர் களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த   செப்டம்பர் மாதமே  காலாவதியாகி விட்டது. இதையடுத்து  புதிய ஒப்பந்தம் போட வேண்டும்.  மோட்டார்  வாகன சட்டத்தால்  10 கோடி மக்களை  பாதிப்பிற்கு உள்ளவார்கள். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு நிவாரணம்  மட்டுமல்ல,  ஒக்கி புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் கூட இன்னும் நிவாரண பணிகள் முழுமையடைய வில்லை. இந்த ஆட்சியில் எந்த  திட்டத்தையும் செயல்படுத்த ஏற் பாடுகள்  எதுவும் இல்லை.  ஜெயலலிதா  அறிவித்த திட்டங்கள் கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை.  அனைத்து  தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.  உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்படும் இடங்களுக்கு விலை நிர்ணயம் செய்வதைவிட, வாடகை கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.  செல்போன்  டவர் அமைப்ப வர்கள் வாடகை கொடுப்பதை போல் மாதாமாதம் வாடகை கொடுங்கள்.  விவசாயிகளின் கோரிக்கையும் அதுதான்.  ஐஐடி மட்டுமல்ல,  இன்டர்னல் மார்க் சிஸ்டம் உள்ள  அறிவியல் கல் லூரிகள் அனைத்திலும்  மாணவர்கள்  மிரட்டப்படுகின்றனர்.  ஐஐடி உள் ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடு படுவோர் மீது தமிழக அரசு கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  உள்ளாட்சி தேர்தலில்  எந்தவித  சிக்கலும் இல்லாமல், யாரும் நீதி மன்றத்துக்கு செல்ல இடம் கொடுக் காமல் தேர்தலை நடத்த தமிழக  அரசு முன்வர வேண்டும் என கூறி னார்.  முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஏ.ரங்கசாமி, அரசு போக்குவரத்து  ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி,  மாநில துணைத்தலைவர் கே. செம்பான், சிஐடியு மாவட்ட தலைவர்  கே.சிங்காரம், மாவட்ட துணைத் தலைவர் எம்.அசோகன்,  மாவட்ட பொருளாளர் ஏ.கே.சந்திரசேகரன்  மற்றும் கிருஷ்ணன், செந்தில் குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.