tamilnadu

கொல்லிமலை: அனைவருக்கும் மலையாளி சாதிச்சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் உறுதி

நாமக்கல், அக். 3- கொல்லிமலை பகுதியில் வாழும் தகுதியான பொது மக்கள் அனைவருக்கும் மலையாளி சாதிச் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சி யர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், வல்வில் ஓரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் சட்ட மன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மேலும், வருவாய் துறை, பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 298 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வெள்ளியன்று வழங்கினார்.  இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதியில் வாழும் அனைத்து தகுதியான பொதுமக்களும் மலையாளி சாதிச் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இதற்காக வருவாய் துறையின் சார்பில் முகாம்கள் நடத்தப்படும். முகாம்கள் நடத்தப்படும் இடங்கள், நாள் குறித்த விவரங்கள் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரி விக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் கூறினார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், மாவட்ட பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பா.இராமசாமி, கொல்லிமலை வருவாய் வட் டாட்சியர் ராஜ்குமார் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.