tamilnadu

விவசாயி வீட்டில் நகை கொள்ளை

நாமக்கல், அக்.17- மல்லசமுத்திரம் அருகே விவசாயி வீட்டில் 20 பவுன்  நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மல்லசமுத்திரம் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் விவ சாயி பரமசிவம்(60). இவரது அம்மா பாக்கியம் (80), மாமியார் நல்லம்மாள் (71) ஆகியோர் வீட்டின் முன்புற மாக உறங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்க்கையில்  பீரோவில் இருந்த 20 சவரன் நகை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, மல்ல சமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப் புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரித்து வரு கின்றனர்.