நாமக்கல், நவ.9- மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கணித ஆசி ரியரை காப்பாற்றும் நோக்கில் கல்வித்துறை அதிகாரிகள் சம ரச முயற்சியில் இறங்கியுள்ள தாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசி புரம் அடுத்த ஒடுவங்குறிச்சி பகுதி யைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர் அங்குள்ள அரசு நடு நிலைப் பள்ளியில் கணித ஆசி ரியராக பணியாற்றி வருகின்றார். இந்த பள்ளியில் 50க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் சிலரிடம் ஆசிரியர் சுரேஷ் ஆபாசமாக பேசுவதாக பெற்றோர்கள் காவல்நிலையத் தில் புகார் அளித்தனர்.இதை யடுத்து புதனன்று இரவு 10 மணி வரை அவரிடம் விசா ரணை மேற்கொண்ட நாமகிரிப் பேட்டை காவல் நிலைய ஆய் வாளர் ராமகிருஷ்ணன் ராசி புரம் மகளிர் காவல்நிலையத் திற்கு அனுப்பி உள்ளார். அங்கு விசாரித்த காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக் காத நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் வட்டார கல்வி அலுவலர்கள் பிரபுகுமார், கணேசன் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து புகாரளித்த மாணவிகள் கூறியதாவது, ஆசிரியர் சுரேஷ் செல்போனில் ஆபாச படத்தை காட்டி உடல் அங்கங்கள் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் ஆபாசமாக கூறுகிறார். மேலும் பாலியல் சீண்டல் நடவடிக்கை களிலும் ஈடுபட்டார். இதுகுறித்து வட்டார கல்வி அலுவலரிடம் தெரிவித்தோம். ஆனாலும் ஆசி ரியர் சுரேஷ் மீது எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர்களிடம் கேட்டபோது, மாணவிகள் கொடுத்த எழுத் துப்பூர்வ ஆவணங்களை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் உதய குமாரிடம் விசாரித்தபோது, வட்டார கல்வி அலுவலர்களிடம் விசாரித்து அறிக்கை அனுப்பும்படி கேட்டுள்ளதாகவும், அறிக்கை வந்ததும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மாணவிகளின் புகார் குறித்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் சுரேஷிடம் விசாரித்தபோது, தான் காவல் நிலையத்தில் இருப்பதால் எதுவும் கூற இயலாது என்றும், அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுமாறும் கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார். இதாற்கிடையே ஆசிரியர் மீது பாதிக்கப்பட்ட மாணவி கள் பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்த பின்னரும் இதுவரை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்காமல் சமரசம் செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பணியிடை நீக்கம்
இந்நிலையில் பாலியல் குற்றச் சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் சுரேஷ் சனியன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.