ஜூலை 30ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
தருமபுரி, ஜூலை 20- காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி உள்வட்டம், இண்டமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வருகின்ற ஜூலை 30 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி உள்வட்டம், இண்டமங் கலம் கிராமத்தில் வருகின்ற ஜூலை 30 ஆம் தேதியன்று (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட வருவாய் அலு வலர் எச்.ரஹமத்துல்லா கான் தலைமை யில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடை பெற உள்ளது. இம்முகாமில் அனைத்துத்துறை அலு வலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளார்கள். எனவே தருமபுரி காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி உள்வட்டம், இண்ட மங்கலம் கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹ மத்துல்லா கான் தெரிவித்துள்ளார்.
காசநோய் பாதித்தவர்களை கண்டறிய தடுப்புக் குழு அமைப்பு- மாவட்ட ஆட்சியர் தகவல்
நாமக்கல், ஜூலை 20- காசநோய் பாதித்தவர்களை கண்டறியத் தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் திருத்தியமைக் கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சார்பில், மாவட்ட அளவிலான காசநோய் தடுப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசிய தாவது, காசநோய் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுகிறது. இதன் அறிகுறிகளாக தொடர் இருமல், மாலை நேர காய்ச்சல், உடல் எடை குறைதல், தொடர் சளி உள்ளிட்ட வற்றில் ஒன்றாக இருக்கும். அரசு மருத்துவ மனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதற்கு சிகிச்சை அளிக் கப்படுகிறது. மருந்து மாத்திரைகள் இலவ சமாக வழங்கப்படுகிறது. 6 மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை பெறுவதன் மூலம் இந்நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். நாமக்கல் மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு 2,104 காசநோயாளிகள், 2018 ஆம் ஆண்டு 2,192 காசநோயாளிகள், 2019 ஆம் ஆண்டு இதுவரை 1,193 காச நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர். காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளால் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும் திருத்தியமைக் கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் சார்பில், காசநோயாளிகளை கண் டறிய மாவட்ட அளவில் தடுப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப் படுகின்றன. மாவட்ட காசநோய் தடுப்புக் குழுவானது, விடுபட்ட காசநோயாளி களைக் கண்டறிந்து, முழுமையான தொடர் சிகிச்சையை அளித்து, அவர்களுக்கான அரசு உதவி தொகை கிடைக்க நடவடிக் கைகளை எடுக்கிறது. நாமக்கல் மாவட் டத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க துறை அலுவ லர்கள் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) தேன்மொழி, சுகா தாரப் பணிகள் துணை இயக்குநர் ரமேஷ் குமார், துணை இயக்குநர் (தொழுநோய்) ஜெயந்தினி, துணை இயக்குநர் காசநோய் கணபதி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப் பாளர் (காசநோய்) கபில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.