நாமக்கல், செப். 19- திருச்செங்கோட்டில் திருமணிமுத்தாறு மேம்பாலம் அமைக்கும் மந்தமாக நடைபெற்று வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், அகரம் வழியாக கொத்தம்பாளையத்தில் திருமணி முத்தாறு தரைப்பாலம் வழியாக 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், திருமணிமுத்தாறு வாய்காலில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், அப்பகுதி பொதுமக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்கின்றனர். இதைத்தொடர்ந்து மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகியும் அப்ப ணியும் முடிந்தபாடில்லை. இவ்வாறு ஒருவருடமாக ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளை விரைவுபடுத்தி மேம்பா லம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.