நாமக்கல், ஆக. 29 - மத்திய அரசு நிறைவேற்றி உள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி வியாழனன்று நாமக்கல் மற்றும் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தியதை முழுமையாக வாபஸ் பெற வேண்டும். சுயத் தொழில் செய்வோரின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும். அரசு பேருந்து செல்லும் வழித்தடங் களில் கார்ப்பரேட் முதலாளிகளும் எந்த நேரத்திலும் பேருந்து இயக்க சட்டம் வழிவகை செய்யப்பட்டுள்ளது இதனை வாபஸ் பெற வேண்டும். இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், ஆறு சக்கர வாகனம் போன்ற வாகனங்களை பழுது நீக்குவோர், சம்பந்தப்பட்ட மோட் டார் வாகன கம்பெனியில் அனுமதி வாங்கித்தான் தொழில் செய்ய வேண்டும் என சட்டம் இயற்றியதை வாபஸ்பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில் மற்றும் தொழி லாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு (சிஐடியு) சார்பில் நாமக்கல் பூங்கா சாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலை வர் ஏ.கே.சந்திரசேகரன் தலைமை வகித் தார். சங்க மாவட்டச் செயலாளர் பி.சிங் காரம் துவக்க உரையாற்றினார். தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் சங்க முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஏ.ரங்கசாமி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்க செயலாளர் வி.செந்தில்குமார், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் பி.பழனிவேல், சாலைப் போக்குவரத்து சங்க மாவட்ட துணை செயலாளர் சு.சுரேஷ், அரசு போக்கு வரத்து கழக சங்க தலைவர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி நிறை வுரை ஆற்றினார். முடிவில் கே.மாதேஸ் வரன் நன்றி கூறினார்.
சேலம்
தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) தலைவர் கே.செம்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.கே. தியாகராஜன், செயலாளர் டி.உதயகுமார், தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஏ.அப்துல் வகாப், மாநில இணைச் செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன், பொருளாளர் திருநாவுக் கரசு, சிஐடியு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர் கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம். நாகராஜன், துணைத் தலைவர் ஆர். சண்முகம், உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர் எம்.ராஜா, பொருளாளர் ஆர்.பிரகாசம், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அப்துல் சமது உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.