tamilnadu

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

நாமக்கல், ஏப்.23- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.பொத்தனூரில் புகைப் பட நிலையம் நடத்தி வந்தவர் சரவணன். இவர் தனது மனைவி ஜோதி, இரட்டைக் குழந்தைகளான 10 வயது தீபகேஷ், சாரகேஷ் உட்பட 6 பேருடன் அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேரில் சரவணனின் மகன்கள் இருவர் உட்பட 4 சிறுவர்கள் இருந்துள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது தீப கேஷ், சாரகேஷ் உட்பட 3 சிறுவர்கள் ஆழமான பகுதிக்குச்சென்றுள்ளனர். சுழலில் சிக்கிய மூவரையும் காப்பா ற்ற பெரியவர்கள் ஒருவர் பின் ஒருவராக முயற்சி செய்து மூவருமே நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதில் சரவணனை தவிர மற்ற இருவருக்கும் நீச்சல் தெரியாது என்றுகூறப்படுகிறது. கரையோரத்தில் நின்ற ஒரு சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான். 6 பேரும் ஆற்று நீரில்அடித்துச் செல்லப்படு வதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கும் தீயணைப்புத்துறைக் கும் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 4 பேரின் உடல்களை மீட்டனர்.மேலும் இருவரது உடல் களைத் தேடி வருகின்றனர். 

;