வேதாரண்யம் அருகே தனியார் பள்ளி விடுதியில் சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. விடுதியில் காலை உணவு சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.