tamilnadu

img

நாடக ஆளுமை செல்வராஜும் நாங்களும்

மக்கள் உடல் நலம் காக்கும் மருத்துவப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மருத்துவர் செல்வராஜ். கடந்த புதனன்று மதுரையில் காலமானார். மக்கள் மனம் நலம் பெற - சமூகத்தைப் புரிந்து கொண்டு வினையாற்ற - நாடகத்தைக் கையிலெடுத்தவர். அவரது நட்பும் தோழமையும் ஆழ்ந்த சிந்தனை யும் பலரையும் ஈர்த்துத் தன்வயப்படுத்தியவை. இவர்களில் சிலர் நாடக ஆளுமை மருத்துவர் செல்வராஜ் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அற்புதமான மனிதர்: எஸ்.வி.ராஜதுரை

இப்படி ஒரு அதிர்ச்சி தரும் தகவலை நான் எதிர்பார்க்கவேயில்லை. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் எனது நண்பர்கள் நால்வர் இறந்து விட்டனர். தோழர் மருத்துவர் செல்வராஜ் போன்ற அர்ப்பணிப்பு மிக்க தோழர்களை இக்காலத்தில் பார்ப்பது அரிது. மிகுந்த கொள்கைப் பிடிப்பு உடையவர். கம்யூனிஸ்டுகள், மார்க்ஸிஸ்டுகள் என்று  அவரிடம் வருபவர்கள் எந்தக் கட்சியையும், குழுவையும் சார்ந்தவர்களாக இருந்தா லும், வித்தியாசம் பார்க்காமல் தோழமை பூணுவார். நல்ல நாடகா சிரியர். அவர் எழுதி அரங்கேறிய நாடகங்கள் எல்லாம் பொதுவுடைமைக் கருத்துகளையும் சாதி எதிர்ப்புக் கருத்துகளையும் எடுத்துக்கூறும்.    பள்ளி, கல்லூரி நாட்களிலியே கம்யூனிசக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு எஸ்.எஃப்.ஐ. அமைப்பில் சேர்ந்து பணி யாற்றி, சிபிஎம் கட்சியின் உறுப்பின ராக இருந்தார். கட்சி எடுக்கும் முடிவு கள் சில அவருக்கு ஏற்புடையதாக இல்லையென்றால் ஒதுங்கிக் கொள்வார். மற்றபடி கொள்கையில் உறுதியோடு இருந்தார். மதுரை ஒத்தக்கடையில் அவர் வைத்திருந்த கிளினிக்கில் அவர் மிகக் குறைந்த கட்டணம் வாங்கியோ,  எந்தக் கட்டண மும் வாங்காமலொ ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கும் ஏதிலிகளுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கி வந்தார். சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்த அற்புதமான மனிதர். 

அரசியல் அரங்கச் செயல்பாடுகளின் ஊற்றுக்கண்: பிரளயன்

1979 ஆம் ஆண்டு தஞ்சையில் தமுஎச நடத்திய நாடகவிழாவில்தான் முதன் முதலாக  நான் செல்வராiஜை சந்தித்தேன்.  கவிஞர்.வெண்மணிதான் அறிமுகம் செய்துவைத்தார். இருவரும் அய்யம்பாளையத்துக்காரர்கள்.  அப்போது நான் திருவண்ணா மலை அரசுக்கல்லூரி மாணவன், செல்வராஜ், மதுரை மருத்து வக்கல்லூரி மாணவர். திருவண்ணாமலை நண்பர்களோடு நான் தயாரித்திருந்த ‘பறிமுதல்’ எனும் நாடகத்தினை அவ்விழாவில் மேடை யேற்றினோம். அந்நாடகத்தில் செல்வ ராஜூம் நடித்தார். 

அப்போது அவர் ‘வட்டத்திற்கு வெளியே’ என்கிற ஒரு நாடகத்தின் பிரதியை  வைத்திருந்தார். அதையும் நாங்களெல்லாம் சேர்ந்து உருவாக்கி அந்நாடகவிழாவில் மேடையேற்றி னோம். இதற்குப்பிறகு அவரோடு அதிகம் தொடர்பில்லை. அவர் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலை வர்களில் ஒருவர். அந்த அடிப்படை யில் அவர் சென்னை வரும்போது ஓரிரு முறை சந்தித்துள்ளேன் அவ்வளவு தான்.  1989இல் சப்தர் ஹாஷ்மியின் மறைவுக்குப்பிறகு ‘சஃப்தர் ஹாஷ்மி கலைக்குழு‘ என்ற பெயரில் மதுரையில் ஒரு நாடகக் குழுவை உருவாக்கி செயல்பட்டு வந்தார். அக்குழு நிகழ்த்திய  கந்தர்வனின் கவிதையொன்றை அடிப்படையாகக் கொண்ட  ‘கேள்விகள்’ எனும் நாடகமும் அவரே எழுதி தயாரித்த வாடகை வீடு எனும் நாடகமும் பலமுறை மேடைகள் கண்டவை. 

மதுரை வட்டாரத்து  பாமர மக்கள் பேசும் பேச்சு மொழி அவர் நாடகங்களின் தனித்த அடையாளம் எனச்சொல்லலாம். 1991 இல் டில்லியில் நடைபெற்ற  கலைஞர்கள் எழுத்தாளர்களுக்கான கூட்டத்தில்  நானும் அவரும் கலந்து கொண்டோம்.  எங்களோடு அருணன், காஸ்யபன், ஜீவபாரதி, சுந்தா ஆகியோரும் பங்கெடுத்தனர்.  ஒருவாரகாலம் சேர்ந்து பயணித்தது, ஒரே இடத்தில் தங்கி ஒன்றாக நேரத்தை கழித்தது எங்களி டத்தில் முன்னைவிட அதிகமான ஒரு பரிச்சயத்தை உண்டாக்கியிருந்தது. 90களின் இறுதியில் சென்னையில் நாங்கள் அனைத்திந்திய மக்கள் நாடகவிழாவை நடத்திய போது சஃப்தர் ஹாஷ்மி குழு செயல்பாட்டில் இல்லை. மதுரை சார்பாக அவர் செயல்பட்ட ‘சமம் கலைக்குழு’ தான் ஸதற்போது அது கருமாத்தூர் கலைக்குழு  பங்கெடுத்தது.

2014 ஆம் ஆண்டு தமு எ க ச கன்னியாகுமரி முட்டத்தில் நடத்திய மாநிலம் தழுவிய 12 நாட்கள் நடை பெற்ற நாடகத் திறன் வளர் பயிலரங்கில் கலந்து கொண்டு கலைஞர்களுக்குப் பயிற்சியளித்தார். உடல் நிலை ஒத்துழைக்காத போதும் மீண்டும் உற்சாகமாக நாடகத்தயாரிப்புகளில்  ஈடுபட்டார். தமுஎ க சவின் நாடக உபகுழுவில் பங்காற்றினார். மதுரை நாடக இயக்கம், மதுரை கூடல் அரங்கு என்ற பெயரில் இயங்கிய நாடகக் குழுக்களோடு செயல்பட்டார். 2017 இல்  தஞ்சையில் நடைபெற்ற தென்னிந்திய மக்கள் நாடகவிழாவிலும்  மதுரை கூடல் அரங்கு சார்பாக  ஒரு நாடகத்தை மேடையேற்றினார்.

கடந்த அக்டோபரில் நடைபெற்ற தென்னிந்திய மக்கள் நாடக விழாவில் மதுரை கூடல் அரங்கு மேடையேற்றிய ‘மந்தையன் செத்துப்போனான்’ என்கிற நாடகம் அவரது பங்களிப்பில் உருவான நாடகம்தான். மதுரை மற்றும் தென்மாவட்டங்க ளில் நடைபெற்ற  அரசியல் அரங்கச்செயல்பாடுகளின் மிக முக்கியமான கண்ணியும் ஊற்றுக்கண்ணுமாக அவர் இருந்தார். உண்மையில் தோழர் டாக்டர். செல்வராஜின் மறைவு ,மக்கள் நாடக இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பை ஏற்படுத்திச்சென்றுள்ளது. அவருக்கு எமது செவ்வணக்கங்கள்!!

தோழர் மருத்துவர் செல்வராஜ்: ஆதவன்தீட்சண்யா

இந்திய மாணவர் சங்கத்தின் சிதம்பரம் மாநிலமாநாட்டில் தான் தோழர் செல்வராஜ் அவர்களை முதன்முதலாக சந்தித்தேன். 1984 மார்ச்சில் வேலைக்குத் தேர்வாகி பயிற்சிக்காக மதுரைக்குப் போன போது அங்கு அவரைத் தவிர யாரையும் தெரியாது. வரும் தகவலை அவருக்குக் கடிதத்தில் எழுதியனுப்பி விட்டு மேலப்பெருமாள் மேஸ்திரி தெருவில் உள்ள எஸ்.எப்.ஐ. அலுவலகத்திற்குப் போய்ச்சேர்ந்தேன். தருமபுரியிலிருந்து தோழர் ரவி வருவார், தங்கவையுங்கள் என்று அங்குள்ளவர்களிடம் பொறுப்பு சொல்லிவிட்டு அவர் மேலூரில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டிருந்தார். பையை வைத்துவிட்டு  நேராக மேலூர் போய் அவர் முன்னே நின்றபோது இறுக்கி அணைத்தபடி அப்படியொரு சிரிப்பு. அந்தச் சிரிப்பு அவரது அடை யாளம் போல எப்போதும் எனக்குள் பதிவாகிப்போனது.  

அவருடனேயே அங்கு இருந்த அந்த ஒருவார காலத்தில் சீனியர் சௌந்தர், நெட்டை சௌந்தர், பின்னா ளில் எம்.பி.யான தோழர் மோகன்  என்று எண்ணற்ற தோழர்களை அறிமுகம் செய்துவைத்தார். பிறகு நரி மேட்டில் அறையெடுத்துத் தங்கி யிருந்தாலும் மூன்று மாதங்களில் அனேகமாக அன்றாடம் மாலை வகுப்பி லிருந்து நேராக வந்து  அவரோடும் மற்ற தோழர்களுடனும் இருந்து பலமுறை டீ குடித்துப் போவதுண்டு. நீண்டகாலமாக மருத்துவம் படிக்கிறேன் என அவரே  அவரை கிண்டல் செய்துகொண்டு சிரிப்பதைப் பார்க்கவேண்டும்.  பிறகு எப்படியோ தொடர்பு அறுந்துபோனது. ஒருநாள் கடலூரில் இருந்து போனில் அழைத்து எப்போதும் போல சிரித்ததிலிருந்து அவரது தோழமை புதுப்பிக்கப்பட்டது. தோழர் எஸ்.வி.ராஜதுரை மதுரையில் தங்கியிருந்த வேளையில் அவ்வளவு அக்கறையோடு கவனித்துக்கொண்ட மருத்துவர் அவர். 

இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் உச்சத்தில் இருந்த நாட்களில் மருத்துவர்கள் மாநாடு ஒன்றில் என்னை அழைத்துப் பேசவைத்தார். பேசி கீழே இறங்கியதும் கட்டிப்பிடித்துக் கொண்டு, நாம் பேசவேண்டிய அரசியல் இதுதான் தோழா என்று  அவர் வெளிப்படுத்திய உணர்வு இன்னும் எனக்குள் இருக்கிறது.   கடைசியாக மேலூர் மாவேந்த னின் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு வந்தாக வேண்டும் என்று உரிமையாக கேட்டுக்கொண்டார். பங்கெடுக்க முடியாமல் போய்விட்டது. இனி பார்க்கவும் முடியாமல் தோழர் செல்வராஜ்  காலமாகிவிட்டார். மேலூரில் வைத்து எனக்கு முதன்முதலாக தமுஎச என்கிற அமைப்பை அறிமுகம் செய்வித்த 

தோழர்.செல்வராஜ்! வழக்கமாக சந்தித்துக்கொண்டால் ஆர்டர் செய்யும் பை டூ டீயில் உங்கள் பங்கு ஆறிக்கொண்டிருக்கிறது.