திருநெல்வேலி, ஏப்.10- ஊரடங்கு காரணமாக தினந்தோறும் பசியால் வாடி வருவதாகவும் தங்க ளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நாடோடி இன மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இத னால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட் கள் கிடைக்காமல் சிரமப் பட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி பல மக்கள் தங்கள் சொந்த இடங்க ளுக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், திரு நெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரமாகக் குடில் அமைத்து திருவண்ணாமலை, கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 30 குடும்பத்தி னர் குழந்தைகளுடன் தங்கி உள்ளனர். அவர்கள் அத்தி யாவசிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். ஊர் ஊராகச் சென்று ஒரு மாதம் தங்கி மண் அரிப்பது, கூலி வேலை போன்ற வேலைகளைச் செய்து வரும் இந்த மக்கள், திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வரு கிறார்கள்.