tamilnadu

img

இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே  தரங்கம்பாடி மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது  இலங்கை கடற்படையினர்  மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் இலங்கை கடற்படையினர் இரும்பு பைப்பை கொண்டு தாக்கியதில் 6 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தி அவர்களது வலைகளை சேதப்படுத்தி மீனவர்களிம் ஜிபிஎஸ் கருவி, தூண்டில், பேட்டரிகள் ஆகிக்யவற்றை திருடிச்சென்ற இலங்கை கடற்படையினர் மீது 3 பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே மீனவர் பிரச்சனைக்கு  நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றும், மீனவர்களை தாக்கிய கடற்படையினர் மீது தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

;