புனே,அக்.6- மகாராஷ்டிர மாநிலம், புனேவில் 700 கோடி ரூபாய்க்கு போலி ஜிஎஸ்டி ரசீதுகளை அளித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருள்களை வாங்காமலும், பொருள்களை விநியோகிக்காமலும் போலியாக ஜிஎஸ்டி ரசீதுகளை சிலர் அளிப்பதாக புனேயில் உள்ள மத்திய ஜிஎஸ்டி ஆணைய அலுவலகத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனை யில் ஜிஎஸ்டியில் ரிலேயபுல் மல்டி டிரேடிங், மற்றும் ஹிமாலயா டிரேட்லிங்ஸ் என்ற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பெயரில் அமித் அசோக் தேப்தே, விலாஸ் எம் அடல் ஆகியோர் போலி ரசீதுகளை 700 கோடி ரூபாய்க்கு அளித்ததை கண்டுபிடித்தனர். மேலும் 54 கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறுவதற்கான உரிமை கோரல்கள் ஆகியவற்றை போலி யாக அளித்து அரசு கருவூலத்துக்கு 2 பேரும் இழப்பு ஏற்படுத்தியதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். இரண்டு பேரின் அலுவலகங்களில் இருந்தும் போலியான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.