tamilnadu

img

பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்காக விசாகா குழு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

நாகர்கோவில், ஆக.25- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 11 வது மாவட்ட மாநாடு நாகர்கோவில் அரசு ஊழியர் சங்க அரங்கில் சனியன்று நடைபெற்றது.  மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர் எஸ்.கனக ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் லீடன்ஸ்டோன் வரவேற்றார். மாவட்ட இணைச்செயலாளர் அருள் சீலி அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றினார். மாநில பொதுச் செயலாளர் எம்.அன்பரசு துவக்கவுரையாற்றி னார். மாவட்ட செயலாளர் சி.எஸ்.கிறிஸ்டோ பர் செயலாளர் அறிக்கை சமர்ப்பித்தார். பொரு ளாளர் உ.சுமதி பொருளாளர் அறிக்கை வாசித்தார். மாநில செயலாளர் சி.ஆர்.ராஜ குமார், தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலு வலர்கள் சங்க முன்னாள் மாநில செயலா ளர் ஏ.வி.மூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் புதிய மாவட்ட தலைவராக எஸ்.கனகராஜ், மாவட்ட செயலாளராக சி.எஸ். கிறிஸ்டோபர், மாவட்ட பொருளாளராக உ. சுமதி, மாவட்ட துணைத்தலைவர்களாக லீடன்ஸ்டோன், சூரிய நாராயணன், ராயல் ஆறுமுகம், பாலகிருஷ்ணன், துணைச் செய லாளர்களாக விஜயகுமார், செய்யதலி, வேல் முருகன், சுபின் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாநில துணைத்தலைவர் குமார வேல் நிறைவுரையாற்றினார். நாகர்கோவில் நகர தலைவர் எம்.கில்பர்ட் சதீஷ் நன்றி கூறினார்.  பிரதிநிதிகள் மாநாட்டை தொடர்ந்து கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் இருந்து அரசு ஊழியர்கள் பேரணி நடைபெற்றது. நாகர் கோவில் அரசு ஊழியர் சங்க அலுவலக வளா கத்தில் நடைபெற்ற பொது மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் எஸ்.கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சுமதி வர வேற்றார். மாவட்ட செயலாளர் சி.எஸ்.கிறிஸ்டோபர், மாநில துணைத்தலைவர் குமாரவேல், மாநில செயலாளர் சி.ஆர்.இராஜ குமார், மாநில பொதுச்செயலாளர் எம்.அன்ப ரசு ஆகியோர் பேசினர். மாவட்ட துணை செய லாளர் செய்யதலி நன்றி கூறினார்.  மாநாட்டில், தமிழக அரசு நடைமுறைப் படுத்தியுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை நிறை வேற்ற வேண்டும், கன்னியாகுமரி மாவட்டத் தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விசாகா குழு அமைக்கப்பட வேண்டும், பெண் ஊழியர்கள் அலுவலக நேரத்திற்கு பிறகும், விடுமுறை நாட்களிலும் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படும் நிகழ்வுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜனவரி 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடை பெற்ற காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.