tamilnadu

img

வடசேரி போலீஸ் எஸ்.ஐ. மீது நடவடிக்கை கோரி குலசேகரத்தில் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூலை.2- பார்வதிபுரம் அருகே அனந்த னார் கால்வாயில் படித்துறை ஆக்கி ரமித்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு போராடிய பிரச்சினை தொடர்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மலைவிளை பாசியையும், பொதுமக்களையும் அவமரியாதை செய்த வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனில்குமார் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குலசேகரம் வட்டார விவசாய தொழி லாளர் சங்கத்தின் சார்பாக குளச்ச விளாகம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  குலசேகரம் வட்டார செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், வட்டார செயலாளர் விஸ்வம்பரன், கிளை செயலாளர் பால்ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டார செயலா ளர் ரெவிநேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;