tamilnadu

img

பழுதாகிய அரசுப் பேருந்தை தள்ளிய மாணவிகள்! - 4 பேர் இடைநீக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை, மாணவிகளை தள்ள வைத்தது தொடர்பாக அப்பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை, மாணவிகளை கொண்டு தள்ள வைத்து பேருந்தை இயக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில், அப்பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 4 பேர் இடைநீக்கம் செய்து பேக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.