tamilnadu

img

கடல்வள மேலாண்மை ஒழுங்கு முறை சட்டத்தை எதிர்த்து அலைகடல் ஆர்ப்பாட்டம்.....

குழித்துறை:
தேசிய கடல்வள மேலாண்மை ஒழுங்கு முறை சட்டம் 2021-க்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டம் சின்னவிளை மீனவ கிராமத்தில் மீனவ பெண்கள் மற்றும் மீனவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு கடற்கரையில் நின்றுஅலைகடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கும் தேசிய கடல்வள மேலாண்மை ஒழுங்குமுறை சட்டம் 2021-க்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு மீனவ அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னவிளை மீனவகிராமத்தில் மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிய அரசை கண்டித்தும் ஞாயிறன்று அலைகடல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தி.மு.க குமரி மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்தார். சின்னவிளை, பெரியவிளை, மண்டைக்காடு உட்பட சுமார் 9-மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், மீனவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் மசோதாவிற்கு எதிர்ப்புதெரிவிக்கும்  வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டனர். கடற்கரையில் நடைபெற்ற அலைகடல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ்,  நாடாளுமன்ற முன்னாள்  உறுப்பினர் பெல்லார்மின்மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

;