நாகர்கோவில்:
ஊழியர்களின் இபிஎப் பண குளறுபடிகளை சரி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இணை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த திருக்கோயில் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் ஏ.அஜித் குமார் தெரிவித்துள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்ட ஆலய ஊழியர்சங்க நிர்வாக குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அதில், குமரி மாவட்டதிருக்கோவில்களில் பணிபுரியும் கோயில் ஊழியர்கள் ஊதிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், பழிவாங்கும் திட்டத்தோடு இடமாற்றம் செய்யப்படுவதை கைவிடவும், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவும் , திருநந்திக்கரை மகாதேவர் திருக்கோயில் பணியாளர் எஸ் கலா குமாரிக்கு ஊதியம் வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் உடனடியாக இணை ஆணையரை சந்தித்து மனு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இணை ஆணையர்அலுவலகம் முன்னால் போராட்டம் நடத்துவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.