tamilnadu

டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.4 லட்சம் கொள்ளையடிக்க முயற்சி

நாகர்கோவில், ஜூலை 14- குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதி யைச் சேர்ந்தவர் சகாய செல்வன் (50). இவர் அழகப்பபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் திங்களன்று இரவு டாஸ்மாக் விற்பனை முடிந்ததும் விற்பனை செய்த பணத்தை எடுத்துக்கொண்டு நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.  அப்போது இவரை இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து வந்தது. மயிலாடி அருகே கூண்டு பாலம் அருகில் வரும் போது பின்னால் வந்த கும்பல் முன்னே சென்று  இவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி மிளகாய்பொடியை தூவி இரும்பு ஆயு தத்தால் அவரை பலமாக தாக்கியுள்ளது.  இதில் அதிர்ச்சி அடைந்த செல்வன் சத்தம் போட்டார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இறங்கி ஓடி வருவதற்குள் செல்வனை தாக்கிய  கும்பல் இவரை விட்டு விட்டு ஓடியது.  இதனால் செல்வனிடம் இருந்த சுமார் ரூ.4 லட்சம் தப்பியது. இதுகுறித்து அஞ்சு கிராமம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்க ரன் மற்றும் அஞ்சுகிராமம் காவல் துறையி னரும், தனிப்படை காவல் துறையினரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.